Wednesday, August 18, 2010

கவிதை


மண்புழு
---------------

மலை சரிவில் புதைந்து
வளர்ந்த சேப்பங்கிழங்குகளை
மண்வெட்டியால் தோண்டியெடுக்கிறான் .
விவசாயி
கிழங்கின் அடியிலிருக்கும் மண்புழுவொன்று
வெட்டுப்பட்டு இரு துண்டாகி
கிழக்கிலொன்றும்,
மேற்கிலொன்றுமாய்
தனித்தனியே
பிரிந்து செல்கிறது அவ்வுடல்
சற்றுத்தள்ளி கடப்பாரையால்
பூமி துளைக்குமொருவன்
கிழக்கில் நகர்ந்த மண்புழுவை
இரு துண்டாக்குகிறான் .
அதன் இரு உடல்
தெற்கிலும் , வடக்கிலுமாக
நகர்ந்து செல்கிறது .
ஒரு உடல்
திசைகொரு உடலாய் ,
திசைகொரு உயிராய்....

பிரிந்து ,பிறந்து

பிறந்து,பிரிந்து


ஆனால் எல்லாம் சம வயதில் .


Monday, August 9, 2010

கவிதைகள்






திரு .பெலிக்ஸ்

------------------------
பல்லுயர் படிம ஆராய்ச்சியாளரான 63வயது திரு .பெலிக்ஸிடம்
177ஆண்டுகள் பழமையான மது புட்டியொன்று கிடைத்தது .
அவரின் 23ம் வயதில்
பொலிவிய நாட்டு கடற்பயண நண்பனொருவன் அதை பரிசளித்தான் .
இதுவரைஅம்மதுவை 3முறை மட்டுமே அருந்தியிருகிறார்.திரு .பெலிக்ஸ்

24 ம் வயதில்
தன் காதலின் வெற்றிக்காய் ஒரு முறை
அப்போது அம்மது இனிப்பு சுவையுடையதாயிருந்தது

37வயதில் வாழ்வின் மீதான சளிப்பால்....
அப்போது அம்மது மிகுந்த புளிப்பு சுவையுடையதாயிருந்தது .

தன் 58வயதில் சீமாட்டி .மேரிபெலிக்ஸ் இறந்து நன்காம் நாளில்
அப்போது அம்மது மிகுந்த கசப்பு சுவையுடையதாயிருந்தது .

கால் பட்டிலிற்கும் குறைவாய் இருந்த அம்மதுவை
தன்80வது பிறந்த நாளில் அருந்த திட்டமிட்டிருந்தார் .
அப்போது வாழ்வின் வேறொரு புதிய சுவையை
தான் அறிவேனென நம்பிகொண்டிருந்தார் .
ஆனால் 63வயதில் இறந்துவிட்டார் .
மிச்சம் இருந்த மதுவைகுவளையில் ஊற்றி அளந்து பார்த்தோம் .
17ஆண்டுகள் மீதமிருந்தது . .

வைஸ்ராய் .மார்ஷலின் டைரிக்குறிப்பு -1
------------------------------------------

வைஸ்ராய் .மார்ஷலின் டைரி குறிப்பில்
1853 சூன் 7ம் திகதி
137 ம் பக்கம்.
கானக வேட்டையில் தாம் சுட்டு வீழ்த்திய
வங்கப்புலியொன்றின் குறிப்பு இருக்கிறது .
7வயது நிரம்பி இருக்கும் தருணத்தில் அது வீழ்த்தப்பட்டது .
கொல்கத்தா அருங்காட்சியகத்தில்
இப்பவும் வைஸ்ராயின் டைரி இருக்கிறது
இரண்டு அறைகள் தாண்டி
கீழே குறிப்புக்கள் ஒட்டப்பட்ட கண்ணாடி பேழைக்குள்
வரியேரிய அப்புலியின் உடல்
தைலம் பூசி பாதுகாக்கப்பட்டு வருகிறது .
டைரி குறிப்பின் சுட்டு வீழ்த்தப்படும் வரிகளுக்கு
இரண்டு வரிக்கு முன்னால்
உறுமலுடன் புலியின் உயிர் இன்னமும் இருக்கிறது .
வைஸ்ராயின் வேட்டையை புகழ்ந்துரைப்பவனையும்
முகத்திற்கு நேராய் வைத்து புகைபடம் எடுப்பவனையும்
பேழையை உடைத்து தாக்க நினைக்கிறது அப்புலி.
பலநூறு மைல்கள் தாண்டி
கானகத்திற்குள் அதன் எலும்புகளை வைத்து
பழங்குடியொருவன் தோலிசை கருவியொன்றை இசைக்கிறான்.
எலும்புகளற்ற புலியால் அசையாதபடிதான்
அசைய முடிகிறது .

வைஸ்ராய் .மார்ஷலின் டைரிக்குறிப்பு -1
----------------------------------------------------------
வைஸ்ராய் .மார்ஷலின் டைரி குறிப்பில்

1853 சூன் 7ம் திகதி 137 ம் பக்கம்.

கானக வேட்டையில் தாம் சுட்டு வீழ்த்திய

வங்கப்புலியொன்றின் குறிப்பு இருக்கிறது .

7வயது நிரம்பி இருக்கும் தருணத்தில் அது வீழ்த்தப்பட்டது .

கொல்கத்தா அருங்காட்சியகத்தில்

இப்பவும் வைஸ்ராயின் டைரி இருக்கிறது

இரண்டு அறைகள் தாண்டி

கீழே குறிப்புக்கள் ஒட்டப்பட்ட கண்ணாடி பேழைக்குள்

வரியேரிய அப்புலியின் உடல்

தைலம் பூசி பாதுகாக்கப்பட்டு வருகிறது .

டைரி குறிப்பின் சுட்டு வீழ்த்தப்படும் வரிகளுக்கு

இரண்டு வரிக்கு முன்னால்

உறுமலுடன் புலியின் உயிர் இன்னமும் இருக்கிறது .

வைஸ்ராயின் வேட்டையை புகழ்ந்துரைப்பவனையும்

முகத்திற்கு நேராய் வைத்து புகைபடம் எடுப்பவனையும்

பேழையை உடைத்து தாக்க நினைக்கிறது அப்புலி.

பலநூறு மைல்கள் தாண்டி

கானகத்திற்குள் அதன் எலும்புகளை வைத்து

பழங்குடியொருவன் தோலிசை கருவியொன்றை இசைக்கிறான்.

எலும்புகளற்ற புலியால் அசையாதபடிதான்
அசைய முடிகிறது .

திரு .பெலிக்ஸ்

------------------------------
பல்லுயர் படிம ஆராய்ச்சியாளரான 63வயது திரு .பெலிக்ஸிடம்

177ஆண்டுகள் பழமையான மது புட்டியொன்று கிடைத்தது .

அவரின் 23ம் வயதில்

பொலிவிய நாட்டு கடற்பயண நண்பனொருவன்

அதை பரிசளித்தான் .]


இதுவரைஅம்மதுவை

3முறை மட்டுமே அருந்தியிருகிறார்.திரு .பெலிக்ஸ்

24 ம் வயதில் தன் காதலின் வெற்றிக்காய் ஒரு முறை

அப்போது அம்மது இனிப்பு சுவையுடையதாயிருந்தது


37வயதில் வாழ்வின் மீதான சளிப்பால்....

அப்போது அம்மது மிகுந்த புளிப்பு சுவையுடையதாயிருந்தது .


தன் 58வயதில்

சீமாட்டி .மேரிபெலிக்ஸ் இறந்து நன்காம் நாளில்

அப்போது அம்மது மிகுந்த கசப்பு சுவையுடையதாயிருந்தது


கால் பட்டிலிற்கும் குறைவாய் இருந்த அம்மதுவை

தன்80வது பிறந்த நாளில் அருந்த திட்டமிட்டிருந்தார் .

அப்போது வாழ்வின் வேறொரு புதிய சுவையை தான் அறிவேனென நம்பிகொண்டிருந்தார் .


ஆனால் 63வயதில் இறந்துவிட்டார் .

மிச்சம் இருந்த மதுவைகுவளையில் ஊற்றி அளந்து பார்த்தோம் .

17ஆண்டுகள் மீதமிருந்தது . .