Thursday, November 18, 2010

ஷீ ...ன் வார்த்தைகளை கா.... பேசினாள்



காலை வணக்கம் ஐயா,
எங்கள் வங்கியிலிருந்து தங்களுக்கு
கடன் அட்டை வழங்குகிறோம் .
நீங்கள் விருப்பமாயிருக்கிறீர்களா ?
இனிய மென்மையான குரலில் வினவினாள். காவ்யா
இரண்டு மாதமாக
தங்களின் கடனட்டை தொகை செலுத்தப்படவில்லை
தொகையை வட்டியோடும், அபராதத்தோடும்
உடனே செலுத்துங்கள் .
காட்டமான குரலில் பேசினாள்.ஷீலா ப்ரியதர்ஷன்
ஷீ ...விடுமுறையில் போயிருந்தாள்
கா ...வை அவளிடத்தில் அமர வைத்தார்கள் .
ஷீ ...யின் வார்த்தைகளை கா .... பேசினாள்.
இனிய மென்மையான குரலில்
பொம்மை துப்பாக்கியால்
சுட்டுடுவன் ....சுட்டு ....டு...வேனென
தந்தையை மிரட்டும் 4வயது பெண் குழந்தையின்
குரல் போலிருந்தது

3 comments:

MSK / Saravana said...

:) கலக்கல்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

என்ன சொல்ல???????ம் அருமை.

Anonymous said...

தங்களுடைய பன்முகத்தன்மை என்னை வியக்க வைக்கிறது. ஓவியர்,புகைப்படம் எடுப்பதில் திறமையானவர்,கவிஞர்.
விரைவில் நட்சத்திரமாக மாறுவீர்கள்.

அன்புடன்,
ஆ.கிருஷ்ண குமார்.