![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEivGGlsOlqRecclI2AzVrT2Y0lG_Dax2Pzd3xsg9iPo0n3WlYHMZLXTwdnl3p5ISya2LF8yNz20Ifvpnrm2S0DXP6DmI8558lJfxqhZZm1AWRGGfI7GCPpUD1E6kjzcS7RNRwLnzVCdADh0/s400/11.jpg)
மண்புழு
---------------
மலை சரிவில் புதைந்து
வளர்ந்த சேப்பங்கிழங்குகளை
மண்வெட்டியால் தோண்டியெடுக்கிறான் .
விவசாயி
கிழங்கின் அடியிலிருக்கும் மண்புழுவொன்று
வெட்டுப்பட்டு இரு துண்டாகி
கிழக்கிலொன்றும்,
மேற்கிலொன்றுமாய்
தனித்தனியே
பிரிந்து செல்கிறது அவ்வுடல்
சற்றுத்தள்ளி கடப்பாரையால்
பூமி துளைக்குமொருவன்
கிழக்கில் நகர்ந்த மண்புழுவை
இரு துண்டாக்குகிறான் .
அதன் இரு உடல்
தெற்கிலும் , வடக்கிலுமாக
நகர்ந்து செல்கிறது .
ஒரு உடல்
திசைகொரு உடலாய் ,
திசைகொரு உயிராய்....
பிரிந்து ,பிறந்து
பிறந்து,பிரிந்து
ஆனால் எல்லாம் சம வயதில் .
3 comments:
புது மாப்ள பேக் டூ பார்ம்.. நல்லாயிருக்கு நண்பா..:-)))
Superb . I love your thoughts . Keep writing more
அருமை.:-)))
பேசியும் பார்த்தும் வெகு நாட்களாகிறது.
Post a Comment