Monday, May 25, 2009

உயிரோசை இதழ் 39 ல் வெளியான எனது கவிதை

விண்ணப்பம்
----------------

மழையைப் பற்றியும்,

வெயிலைப் பற்றியும்

ஆய்வு மேற்கொள்பவன்

மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகிறான் .

மழைப் பற்றிய தம் ஆய்வு முடிவுகளை

ஒரு மழை நாளில் நனைந்தபடியே

மேலதிகாரியிடம் கொண்டு வந்தான் .

அதனை கோப்பில் பத்திரப்படுத்த உத்தரவிட்டார் .

மேலதிகாரி

சில நாட்களுக்குப் பின்னர்

அக்கோப்பை எடுத்துப் பார்க்கையில்

மழை பற்றிய ஆய்வுக் குறிப்புகள் யாவும்

உலர்ந்து

வெறும் காகிதம் மட்டுமேயிருந்தது .

வெயில் பற்றிய அவனது ஆய்வுக் குறிப்புகளோடு

அலுவலகத்திற்குள்

அவன் நுழையத் துவங்கியதும்

வெயில் காணாமல் போய்

குறிப்புகளின் மேல்

நிழல் படியத் துவங்கி விடுகிறது .

பைத்தியத்தைப் போல கத்துகிறான் .

வெயிலுக்கும் ,மழைக்கும் நடுவே நின்று

ஒரு காகிதத்தை எடுத்து

மழை பற்றிய

ஆய்வுக் குறிப்புகளைச் சேகரிக்க

நீர்த்தொட்டியொன்றையும் ,

வெயில் பற்றிய

ஆய்வுக் குறிப்புகளைச் சேகரிக்க

மேல் கூரையற்ற

சிறிய அறையொன்றையும்

கட்டித்தருமாறும் அரசாங்கத்திடம் விண்ணப்பித்தான் .

3 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

:)

-ப்ரியமுடன்
சேரல்

விஜய் மகேந்திரன் said...

good one!

Anonymous said...

அப்படியே வரிசையா எழுதி படிச்சா கட்டுரை மாதிரி இருக்குங்க.